கரூர்—காங்கிரஸ் கட்சியினுடைய 139 ஆண்டு துவக்க விழா..
காங்கிரஸ் கட்சியினுடைய 139 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் உப்பிடமங்கத்தில் ஏ ஐ சி சி மெம்பர் பேங்க் சுப்ரமணியன் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து அன்னை இந்திரா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இணைப்புகள் வழங்கி ஆண்டு விழாவைசிறப்பாக கொண்டாடினர்பின்னர் காங்கிரஸ் கட்சியினுடைய கொள்கைகள் சுதந்திரத்திற்காக தலைவர்கள் ஆற்றிய பங்கு ஆகியவற்றை பற்றி சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் முருகேசன் தலைமை தாங்கினர். உடன் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் சின்னையன் RTI மாநில பொதுச் செயலாளர் ஜி பி எம் மனோகரன் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் சுப்பன் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் காந்திகிராமம் ரவி சனப்பிரட்டி செயலாளர் செல்வராஜ் உப்பிடமங்கலம் நகரத் தலைவர் சரவணன் மற்றும் டெய்லர் முனியப்பன் சைக்கிள் கடை மணி கோவிந்தராஜ் முன்னாள் நகரத் தலைவர் நடராஜன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாரதி நன்றி கூறினார்.
கரூர் மாவட்ட செய்தியாளர்
கு ரமேஷ்