fbpx
Others

கம்பம் தேவர் குருபூஜை 2022 ……செய்தி

 முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்வையொட்டி தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் அவரின் திருவுருவ சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து வணங்கினர்.  அதன்பின்னர் சீர் மரபினர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை முன்பாக சீர் மரவினருக்கு எதிராக செயல்படும் அரசுக்கு வாக்களிக்க மாட்டோம், மதுரையில் உள்ள விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்பது போன்ற உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர். இந்த விழாவில் தேவர் சமுதாய அமைப்புகள், சீர் மரபினர் அமைப்புகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close