fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளியுங்கள்:பிரதமருக்கு சோனியா கடிதம்!

Congress president Sonia Gandhi letter to Modi

டெல்லி:

அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுவதும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ படிப்பில், ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வெகுவாக எழுந்து வருகிறது.

இந்நிலையில்  நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில், அவர் கூறி இருப்பதாவது:

இடஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. 2017 முதல் ஓபிசி பிரிவினர் அகில இந்திய ஒதுக்கீட்டில் 11000 இடங்களை இழந்துள்ளனர்.

நீட் தேர்வின் போது மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையின் போது இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. எனவே சமூக நீதியை அனைவருக்கும் நிலைநாட்டும் அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close