ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு
அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு, பாய்லர் வெடித்துள்ளது. இதனால், ஏற்பட்ட தீ பிழம்பில் சிக்கி ஊழியர் பெருமாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார். பன்னீர், சரவணன் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்துதண்டையார்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து 5 வாகனங்களில் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீர் மற்றும்நுரைகலவை மூலம் பற்றி எரிந்ததீயை போராடி அணைத்தனர்.இதையடுத்து, காயம் அடைந்தசரவணன், பன்னீர் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள், ஐஓசி அதிகாரிகள் உள்ளிட்டோர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த பெருமாள் குடும்பத்துக்கு ஐஓசி நிறுவனம் சார்பில் நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.