GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
கொரோனா அச்சுறுத்தல்..! தாஜ்மஹால் திறக்கப்படாது என அறிவிப்பு!
Tajmahal will not open
டெல்லி:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹால் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமான தாஜ்மஹால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில், இன்று முதல் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது
ஆனால் ஆக்ராவில் நோய்த்தொற்று காரணமாக 71 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால், தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி, ஆக்ரா கோட்டை உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் இப்போது திறக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.