fbpx
Others

திண்டுக்கல்–பாஜகமாவட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டம்…

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் உள்ள புனிதவியாகுல அன்னை ஆலயத்தில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பங்குத்தந்தை செல்வராஜை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில், பாஜ கட்சியின் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப்பெருமாள் தலைமை வகித்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் முத்து ராமலிங்கம் வரவேற்றார்.மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: இரட்டை இலை, தாமரை உறுதியான, இறுதியான கூட்டணி. அதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கெடுப்பு என்பது குறித்து நமக்கு தேவையில்லை. இது குறித்து இணையதளத்தில் பகிர்வதால் எந்த பிரச்சனையும் வந்து விடக் கூடாது. திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப் படுத்த வேண்டியது தான் நமது வேலை. அது தான் முக்கியம்.யார் யாருக்கு எவ்வளவு, தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கு வகிக்கும் கட்சிகள் குறித்து அமித்ஷா அவர்களும், இபிஸ் அவர்களுக்கு பார்த்துக் கொள்வார்கள். வலைதளங்களில் நமது பதிவுகள் நாகரிகமாக இருக்க வேண்டும். நமது கட்சியை சேர்ந்தவர் ஒரு பதிவு போட்டால் அது நியாயமாக இருக்கும் என அனைவரும் மதிக்க வேண்டும். நான் தலைவராக இல்லை. தலைமை தொண்டனாக தான் இருக்கிறேன்.இந்த முறை சட்டமன்றத்துக்கு பாஜகவைச் சேர்ந்த அதிக எம்எல்ஏக்கள் செல்வார்கள். தேசிய ஜனநாயக ஆட்சி இபிஎஸ் தலைமையில் நடைபெறும். இந்தியா ஆன்மிக நாடு. இங்கு வேதங்கள் முழங்க வேண்டும். நாட்டில் மழை பெய்து செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் வேதங்கள் முழங்க வேண்டும். தமிழக முதலமைச்சர் தமிழ்நாடு அரசு மத்திய அரசு கண்ட்ரோலில் இருந்து அவுட் ஆப் கண்ட்ரோலில் சென்றுள்ளது என கூறியுள்ளார்.நமது உழைப்பில் 2026-ல் திமுக தமிழ்நாட்டை விட்டு அவுட் ஆப் கண்ட்ரோலில் போக வேண்டும். அதுவே, எனது எண்ணமும் செயலாகவும் இருக்கும். எந்த ஷா வந்தாலும் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என, தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகியவற்றில் பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும் அது அவருடைய பொறுப்பு. 2026-ல் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக ஆட்சிக்கு திண்டுக்கல் பூட்டு போட வேண்டும், என்றார்தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் எச்.ராஜா, திருமலைசாமி, மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் ஜெயராமன் நன்றி கூறினார்.முன்னதாக பழநியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆளுநரை தபால்காரர் என கொச்சைப் படுத்துவது முதல்வருக்கு அழகல்ல, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என்பது அவர்களின் விருப்பம்.” என்றார்.

Related Articles

Back to top button
Close
Close