கோவையில் பயிர்களை நாசம் செய்து 4 பேரை கொன்ற யானை பிடிபட்டது.
கோவையில் ஏராளமான பயிர்களை நாசம்செய்து மேலும் 4 பேரை கொன்ற விநாயகன் என்ற யானை வனத்துறையுனரால் பிடிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஊர்களில் கட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வழக்கமாகவே உள்ளது.இந்நிலையில் 2 யானைகள் அந்த பகுதியில் சுற்றிவருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும், அப்பகுதி வனத்துறையும் யானைகளை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். கும்கி யானைகளை கொண்டு அந்த யானைகளை பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று ( செவ்வாய் கிழமை அன்று விநாயகன் என்ற யானை மயக்க ஊசி போடப்பபட்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மண்டலா வனப்பாதுகாப்பு காவலர் தீபக் ஸ்ரீனிவாசன் கூறுகையில் ;
விநாயகன் என்ற கட்டு யானை பொது மக்கள் 4 பேரை கொன்றதுடன் ஏராளமான பயிர்களை நாசமும் செய்துள்ளது.இந்த யானை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வயநாடு வன பகுதியில் விடப்படும். இந்த யானை நான்கரை டன் உடையதாகவும், அதன் வயது 30 வயத்திற்குள்ளும் இருக்கும் என்று கூறினார்.