fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

மகாராஷ்டிராவை சூழ்ந்த கொரோனா சோகம்…! 24 மணி நேரத்தில் 175 பேர் பலி!

Maharashtra causalities in last 24 hours in about 175

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில்  24 மணி நேரத்தில் மேலும் 5,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 446 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை 77 லட்சத்து 76 ஆயிரத்து 228 என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,52,765ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 175 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் 7,106 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close