பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை சந்திக்கிறார் பியூஷ் கோயல்!
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று மதியம் 2 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் மற்றும் துணை முதல்வரை அமித்ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமித் ஷாவின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டப்படி பாஜக தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வருகிறார் என தகவல் வெளியானது.
ஏற்கனவே அதிமுக – பாமக கூட்டணிக்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், தேமுதிகவும் இந்த கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தை மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று சந்தித்து பேசுகிறார்.