ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
சென்னையில் முக்கிய அரசுத்துறை ஊழியருக்கு கொரோனா..! உயரதிகாரிகள் ஷாக்!
Chennai government employee affected corona
சென்னை:
தலைநகர் சென்னையில் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அதிகளவாக சென்னை நபர்கள் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது.
இந் நிலையில் தேர்வுத்துறை இயக்குனர் அலுவல பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக தேர்வுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே தேர்வுத்துறை உதவி இயக்குனர் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே அலுவலகத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.