வங்கதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 56 பேர் பரிதாப பலி.
வங்கதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்றாக திகழ்வது சாவ்க்பஜார் . இந்த சாவ்க்பஜார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இரசாயன பண்டகசாலையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த பண்டகசாலையுள் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாகத்தான் மளமளவென தீ அந்த அடுக்குமாடி முழுவதும் பரவியுள்ளது.
அவ்வாறு பரவிய இந்த தீயில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் போலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
முன்னேர் 2010-ல் டாக்காவில் இதே போன்று இரசாயன பண்டக சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் 120 பேர் பலியாகியுள்ள சம்பவம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.