டெல்லி:
பிரதமர் மோடியும், ஆஸி. பிரதமர் ஸ்காட் மோரிசனும் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்தியா, ஆஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த மாநாடு டெல்லியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பங்கேற்க ஸ்காட் மோரிசன் இந்தியா வர விருந்தார். ஆனால் கொரோனா காரணமாக அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இரு நாட்டு பிரதமர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு , பாதுகாப்பு,, கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளனர்.
முக்கியமாக உலக நாடுகளை ஆட்டி படைக்கும் பரவியுள்ள கொரேனா தொற்று குறித்தும் ஆலோசனை நடத்துகின்றனர். இரு நாடுகளுக்கிடையே உறவு மேலும் வளர எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் விவாதிக்கின்றனர்.