Others
பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு..!
சென்னையில் காலை 7 – நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அந்த நேரத்தில் வாகனங்களை போலீசார் அனுமதித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். பெரம்பூரில் நேற்று லாரி ஏறியதில் 10 வயது பள்ளி சிறுமி பலியான நிலையில், அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.