Others
சி பி ஐ( எம்)-கர்நாடக அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து-ரயில் மறியல்..
நீடாமங்கலம் ஜூன் 16 காவேரி டெல்டா பாசனம் மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து காவேரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் டெல்டா மாவட்ட முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக நீடாமங்கலத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு சி பி ஐ( எம்) விவசாய சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் கே சுப்பிரமணியன் சிபிஐ தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கே. ராவணன்ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்த போராட்டத்திற்கு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று விண்ணதிரும் கோஷங்களை எழுப்பினர் .