இந்தியாவை ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று மோடி கூறுவது பொய்…
தேர்தல் நேரத்தில் 2 முதல்வர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இருக்கையில் இந்தியாவை ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று மோடி கூறுவது பொய் என்றும், இதே நிலை நீடித்தால் அது ரஷ்யா, வடகொரியா நிலைமைக்கு சென்றுவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகள் ஒருபக்கம் இருந்தாலும், விசாரணை அமைப்புகளை கையில் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளை முடக்கும் பாஜக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது. அதுவும் தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுப்பது என்பது ஜனநாயகத்திற்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமை விவகாரங்கள் குறித்து பேசுபவருமான ஆகார் படேல் என்பவர், பிரபல நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில், ‘இந்தியாவில் நடக்கும் தேர்தலானது நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் என்ற முழக்கம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இந்த தேர்தல் ஒரு ஏமாற்று வேலை, மோசடி என்று கூறுகிறேன். பிரதமர் மோடி, இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று கூறுகிறார். ஆனால் உண்மையில் அவர் கூறுவது பொய் மட்டுமல்ல; நகைச்சுவையும் கூட என்பது தெளிவாகிறது. இத்தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லு மற்றும் தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கேற்றவாறு பிரசாரம் செய்கின்றனர்.