Others
ஆற்காடு நகர காவல் நிலைய சிறப்பு செய்தி
இராணிப்பேட்டை ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோசடி குற்றத்தில் ஈடுபட்ட சேது (வ/36) த/பெ சத்தியசீலன் என்பவரை ஆற்காடு நகர வட்ட காவல் ஆய்வாளர் .பார்த்தசாரதி அவர்கள் தலைமையில் எதிரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்டகாவல்கண்காணிப்பாளர். அய்மன் ஜமால், அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் சேது (வ/36) த/பெ சத்தியசீலன் எண்:-20/09, ஏரிக்கரை தெரு, கஸ்பா, ஆற்காடு, ஆற்காடு தாலுக்கா, இராணிப்பேட்டை மாவட்டம். என்பவர் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.