சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும்..! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
Sushanth case transfer to CBI says apex court
டெல்லி:
சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இவர் தற்கொலை செய்திருப்பார் எனவும் தகவல் வெளியானது.
இந் நிலையில், சுசாந்த் சிங் இறந்த போது, அவருடைய வீட்டில் அவருடன் நண்பர்களும் இருந்ததால், அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் மரணத்தில் நாளுக்கு நாள், பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந் நிலையில், நடிகர் சுஷாந்த் சிங், மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சுஷாந்த் சிங் மரணம் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பரிந்துரை செய்ததையடுத்து, பிரபல பாலிவுட் நட்சத்திரம் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.