ரயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை..! ரயில்வே நிர்வாகம் முடிவு!
Corona mask, sanitizer will sale in platforms says railway board
டெல்லி:
ரயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில் நிலைய நடைமேடைகளில் தனியார் மூலம் நடத்தப்படும் கடைகளில் ரயில் பயணிகளுக்கு தேவையான தண்ணீர், பாக்கெட் உணவுகள், புத்தகங்கள், மருந்துகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரயில் நிலைய நடைமேடை கடைகளில் பயணிகளுக்காக கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் முக கவசம், கிருமி நாசினி, கையுறை, படுக்கை விரிப்புகள் போன்றவை அனைத்தும் ரயில் நிலைய கடைகளில் விற்பனை செய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறினர். பயணிகள் வீடுகளில் இருந்து வரும்போது மேற்படி கொரோனா தடுப்பு பொருட்களை எடுத்துவர மறந்தாலும் ரயில் நிலையங்களிலேயே அவற்றை வாங்கிக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தனர்.