விமான சேவை தொடக்கமா? முன்பதிவு நடவடிக்கைகளை தொடங்கிய விமான நிறுவனங்கள்!
Airlines starts ticket bookings
டெல்லி:
ஜூன் மாத பயணத்திற்கான பயணசீட்டு முன்பதிவுகளை சில விமான நிறுவனங்கள் தொடங்கி உள்ளன.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். போக்குவரத்து முடக்கப்பட்டு உள்ளது. பாதிப்பு அதிகரிப்பு காரணமாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
4ம் கட்ட ஊரடங்கு இந்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அது வரை அனைத்து விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில் ஜூன் மாதத்துக்கான விமான டிக்கெட் முன் பதிவுகளை சில விமான நிறுவனங்கள் தொடங்கி இருக்கின்றன.
இண்டிகோ மற்றும் விஸ்டாரா ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டு விமானங்களுக்கு முன்பதிவை ஆரம்பித்து உள்ளன. மற்ற நிறுவனங்களும் படிப்படியாக பயணச்சீட்டு தொடக்கத்தை விரைவில் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.
எந்த விமான நிறுவனத்துக்கும், பயண சீட்டு முன்பதிவுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை. மே 31ம் தேதியுடன் லாக்டவுன் முடிவுக்கு வரும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது.