இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 35 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததால் உயிரிழப்பு 308 ஆக அதிகரித்துள்ளது. 9,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் 7 ஆயிரத்து 987 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.. 856 பேர் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது