fbpx
Others

கோவை–முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம்—புகார்!

விருதாச்சலத்தை சேர்ந்த பெண் முதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதனை மறைத்து தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார் அவர் மீது பெற்றோர்கள் புகார் அளித்த நிலையில் அந்தப் பெண் பெற்றோர்களின் மீது பொய் புகார் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாநகர காவல் ஆணையர்கோவையில் மாநகர காவல் ஆணையரிடம் சாரா என்ற விஜயசாமுண்டீஸ்வரி புகார் அளித்தார் அந்த புகாரில் அந்த இளம் பெண் கடந்த ஜனவரி 20ஆம் தேதி தனது இன்ஸ்டால் மூலம் பழகி வந்தவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் இரண்டு மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.பெற்றோர்கள் பொய்யான புகார் கொடுத்துள்ளனர்இந்நிலையில் சாராவின் பெற்றோர்கள் அவர் மீது பொய்யான புகார் அளித்து கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இதன் மூலம் அவர்களை பிரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது பெற்றோர்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருபதாக தன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் தனக்கு ஒரு அக்கா இருப்பதாகவும் அவரின் குழந்தைகளை தனது குழந்தைகள் என்றுகூறிபுகார்கொடுத்திருப்பதாக சாரா தெரிவித்திருந்தார்.ஆதாரங்களுடன் வீடியோஇந்நிலையில் சாரா என்ற விஜய சாமுண்டீஸ்வரிதந்தையானபாரதிதாசன்தனதுமகளானசாராஎன்றவிஜயசாமுண்டீஸ்வரருக்கு முன்னதாகவே திருமணம் ஆனது அதற்கு ஆதாரங்களுடன் குழந்தைகளுடன் ஒருவீடியோவை வெளியிட்டுள்ளார்.பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்
விருதாச்சலத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகளின் பெயர் விஜய சாமுண்டீஸ்வரி, இளைய மகள் வைத்தீஸ்வரி தனது. மூத்த மகளான விஜய சாமுண்டீஸ்வரிக்கு திருமணம் செய்து கொடுத்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றது/ கடந்த 2020 ஆம் ஆண்டு வேல்முருகன் என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.இரண்டாவது முறையாக புகார்
அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு தன்னுடைய மகள் காணாமல் போனதால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தோம் .அதன் பிறகு கோவை போத்தனூர் பகுதியில் அவர் இருப்பதாக காவல்துறையினர் மூலம் தெரியவந்தது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பெண்ணை தங்களுடன் அனுப்பி வைத்ததாகவும் மீண்டும் கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன்னுடைய பெண்ணை அழைத்துச் சென்றதாகவும் அதனால் இரண்டாவது முறையாக புகார் அளித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.வீடியோ வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முன்னதாகவே திருமணமான பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கோவையைச் சேர்ந்த வாலிபர் மதமாற்றி தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார் சாரா என்ற அந்தப் பெண் காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு திருமணம் ஆகவில்லை பொய் புகார் கொடுத்துள்ளனர் என்று கூறி பேட்டி கொடுத்திருந்த நிலையில் இன்று அவருடைய பெற்றோர்கள் இதுபோன்ற வீடியோவை வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்ட நிருபர்  க. அஜித் குமார்

Related Articles

Back to top button
Close
Close