ChennaiOthersRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
மாவட்ட ஆட்சியர்களுடன் வருகின்ற 29-ஆம் தேதி ஆலோசனை-முதல்வர் பழனிச்சாமி!
EPS consulting district collectors
சென்னை:
சென்னையில் அதிகமாக கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், அங்கு பலவிதமான கட்டுப்பாடுகளை அரசு செயல்படுத்தி வருகின்றது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் கூட தடைகளும் செயல்முறையில் உள்ளன.
சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. எனவே கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவது குறித்து வருகின்ற 29-ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்க்கொள்ள உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருகின்ற 31-ஆம் தேதியுடன் கொரோனா தொற்றிற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகளை வழங்கலாமா என மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.