1300 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி
குஜராத் மாநிலம் சுரத்தை சேர்ந்தவர் மஹேஷ் சவானி எனும் தொழிலதிபர்.வைர வியாபாரியான இவர் 261 பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளார். நேற்று தான் சூரத்தில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரங்கில் திருமணம் நடைபெற்றது.
2008-ஆம் ஆண்டு மஹேஷ் சவானின் திருமணம் நடந்தது.ஆனால் மஹேஷின் திருமணத்திற்கு முன்பே அவரது தந்தை காலமாகிவிட்டார்.எனவே அவரது திருமணம் தந்தை இல்லாமல் நடந்தது, அதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அவர் தந்தை இல்லாமல் இருக்கும் ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தார்.அதன்படி 2012-ஆம் ஆண்டு முதல் 6 வருடங்களாக தந்தை இல்லாமல் இருக்கும் ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தார் மஹேஷ்.சூரத்தில் நடந்த இந்த திருமணத்தில் மஹேஷ் ஒரு தந்தையாக இருந்து அனைத்து சடங்குகளையும் செய்து வைத்தார்.
மேலும் இவர் திருமணம் செய்து வைத்த அத்தனை பெண்களுக்கும் தங்க நகைகளும் , வீட்டு உபயோக பொருட்களும் சீதனமாக கொடுத்துள்ளார். இதுவரை 1300 தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
.சூரத்தில் நடந்த திருமணத்தில் ஒரு பெண் தன்னை அறியாமல் கண்ணீர் சிந்தினால் அதை மஹேஷ் ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து துடைத்து சமாதானம் செய்தார்.இந்த காட்சி அனைவரின் மனதையும் கவர்ந்தது.