fbpx
Others

பெருந்தலைவர். கு. காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாள் விழா– சிறப்பு செய்தி

நாடார் சமூக நலப் பாதுகாப்பு பேரமைப்பு சங்கத்தின் சார்பாக கல்விக்கண் திறந்த கர்மவீரர். பெருந்தலைவர்.
கு. காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.   சென்னை அருகே செங்குன்றம். காந்திநகர் சுப்புராயலு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி பேரமைப்பு நிறுவனத் தலைவர் கே. சங்கரலிங்கம் நாடார் தலைமையிலும் செயலாளர் எல். சண்முகசுந்தர பெருமாள் நாடார் .பொருளாளர்.எஸ். தாளமுத்து நாடார் முன்னியிலும் நடைபெற்றது.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவரும், நாடார் பேரவை தலைவரும், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவருமான அருமை அண்ணாச்சி எர்ணாவூர் .ஏ. நாராயணன் அவர்கள் கலந்து கொண்டு கல்வி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.மற்றும் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்வி ஊக்கப் பரிசு வழங்கி ஏழை எளிய மற்றும் முதியோர்களுக்கும் மகளிருக்கும் சேலை.வேஷ்டிவழங்கிசிறப்புரையாற்றினார் .அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மக்கள் சேவகர் மாதவரம் எம்.ஏ. குமரன் முனைவர். கிறிஸ்டோபர் .எஸ். தங்கமுத்து நாடார் .சிவ சுகுமாரன் நாடார்
அன்பையா . சசிகுமார் நாடார் கே.பக.முத்துக்குமார் நாடார் தொழில் அதிபர் கே.சங்கரலிங்க நாடார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் எஸ் எம் எல் ஜே.சிலம்ப கூட மாணவர்களின் சிலம்பம் சுருள்மான் கொம்பு போன்ற வீர தீர செயல்களை பள்ளி மாணவர்கள் செய்து காட்டினார்கள். நிகழ்ச்சியில் பேரமைப்பு நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மகளிர் அணி இளைஞர் அணி பேரமைப்பு உறுப்பினர்கள் மற்றும் குழந்தை பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

Related Articles

Back to top button
Close
Close