சந்திரபாபு நாயுடு நடிகர் சோனு சூட் உதவியை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்!
chandrababu naidu lauded actor sonu sood
ஆந்திரா மாநிலத்தில் உள்ள விவசாயிக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் ஒன்றை அவர் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இதனை பாராட்டி சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவர் தனது விளை நிலங்களை உழுவதற்கு மாடு வாங்கும் அளவிற்கு பணம் இல்லாததால், தனது இரு மகள்களை கொண்டு நிலத்தை உழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியாது.
அந்த வீடியோவை பார்த்து நெகிழ்ந்த நடிகர் சோனு சூட் அந்த குடுப்பதிற்கு ஒரு புதிய டிராக்டரை அனுப்பி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் நடிகர் சோனு சூட்டை தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு பாராட்டினேன். அந்த குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு அந்த இரு பெண்களின் படிப்பு செலவினை தானே ஏற்றுக்கொள்கிறேன் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.