பான் எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்கவேண்டும் :சுப்ரீம் கோர்ட்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை என்று சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ ஆகிய இருவர் 201819 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரி கணக்குகளை ஆதார் மற்றும் பான் கார்ட் எண் இணைக்காமல் தாக்கல் செய்யலாம் என டெல்லி ஐகோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையுடு தாக்கல் செய்தது.
வருமான வரி சட்ட பிரிவு 139ஏஏ இதன் அடிப்படையில் . வருமான வரி தாக்களின் போது ஆதார் என்னுடன் பான் கார்டு எண் என்று அழைக்கப்படுகின்ற வருமான வரி நிரந்திர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறுகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் மேல் முறையூட்டை விசாரித்த சுப்ரீம் கோர்ட் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் என்னுடன் பான் கார்ட் எண்ணையும் இணைப்பது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது.