Others
Read Next
Others
13 hours ago
தமிழக அரசுக்கு வேல்முருகன் கேள்வி …?
Others
13 hours ago
தேவசெய்தி 16 / 7 / 26
Others
2 days ago
தேவசெய்தி 15 / 7 / 26
Others
3 days ago
ஆந்திர மாநிலத்தில் கூட்டுக் குடும்பம்…
13 hours ago
தமிழக அரசுக்கு வேல்முருகன் கேள்வி …?
13 hours ago
தேவசெய்தி 16 / 7 / 26
14 hours ago
மறைமலையடிகளின் 150-வது ( july 15 1876 ) பிறந்தநாள் பெருவிழா….
1 day ago
போடியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 124 வது பிறந்தநாள்…
1 day ago
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…
2 days ago
சிபிஎஸ்இ பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுஅமைச்சர் ராஜ்மோகன்வழங்கினார்..
2 days ago
தேவசெய்தி 15 / 7 / 26
2 days ago
பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜய், தனது எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா..சிறப்பு செய்தி.
3 days ago
ஆந்திர மாநிலத்தில் கூட்டுக் குடும்பம்…
3 days ago
‘நலம் TN’ இணையதளத்தை முதலமைச்சர்.விஜய் தொடங்கி வைத்தார்…
Related Articles
தந்தையும், மகனும் சந்திப்பு..
3 days ago
தேவசெய்தி 14 / 7 / 26
3 days ago
தேவசெய்தி 13 / 7 / 26
3 days ago
தேவசெய்தி 12 / 7 / 26
5 days ago
தேவசெய்தி 11 / 7 / 26
5 days ago
பிரம்பனன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி…
7 days ago
தேவசெய்தி 10 / 7 / 26
7 days ago
திருவண்ணாமலை சிறப்பு செய்தி….
7 days ago
திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் ஏசி வேலை செய்யாததால், ஜோலார்பேட்டை-சேலத்திற்கு இடையே ரயில் சென்றபோது அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் பயணிகள் நிறுத்தினர். தண்டவாளத்தில் இறங்கி போராடிய பயணிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் (12695), தினமும் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியே இயக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ் நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது. அந்த ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில், ஏசி சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. அரக்கோணத்தை ரயில் கடந்தபோது, 20க்கும் மேற்பட்ட பயணிகள், டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், ஆன்லைன் மூலமும் ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் கூறியுள்ளனர்.இதையடுத்து மாலை 6.28 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்ததும், ஏசி மெக்கானிக் வந்து பார்த்துள்ளார். இதனால் 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுள்ளது. ஆனாலும், ஏசி சரியாகாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். ஜோலார்பேட்டை-சேலம் இடையே வந்தபோது, திடீரென அந்த முதல் வகுப்பு ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்தனர். நடுவழியில் ரயில் நின்றதால் பயணிகள் கீழே இறங்கி, அருகில் செல்லும் இணை தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் அந்த ரயிலில் ரோந்து பணியில் இருந்த ஆர்பிஎப் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேலத்திற்கு சென்றதும், சரி செய்துவிடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ரயில் புறப்பட்டது. சேலத்துக்கு வந்ததும் மெக்கானிக் ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். முடியாததால் சேலம் கோட்ட இயக்கப்பிரிவு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அருகில் உள்ள இரண்டடுக்கு ஏசி பெட்டிக்கு பயணிகளை மாற்றி இருக்கை ஒதுக்கீடு செய்து கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.