fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

சென்னையில் உக்கிரமாகும் கொரோனா…! நேற்று ஒரே நாளில் 8 பலி!

Chennai corona 8 cases corona dead

சென்னை:

சென்னையில் கொரோனா நோயாளிகள் 8 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர், விருகம்பாக்கத்தை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 65 வயது முதியவர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள், திருவள்ளூரை சேர்ந்த 50 வயது ஆண் ஒருவரும், கொடுங்கையூரை சேர்ந்த 46 வயது ஆண் நபர் ஆவார்கள்.

ஓமாந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மண்ணடியை சேர்ந்த 75 வயது முதியவர் இறந்துள்ளார். பூந்தமல்லியை சேர்ந்த 75 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேபோல, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஓட்டேரியை சேர்ந்த 46 வயது ஆண் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close