மனிதநேய ஜனநாயக கட்சியின் கம்பம் நகர ஆலோசனை கூட்டம்.!
மனிதநேய ஜனநாயக கட்சி தேனி மாவட்டம் கம்பம் நகர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் கம்பம் கரீம் அவர்களின் தலைமையிலும் மாநில செயற்குழு உறுப்பினர் ரியாஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் ரியாஸ் அவர்களின்அலுவலகத்தில்நடைபெற்றது கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் எதிர்கால செயல்திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது
மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரிEX,MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி தேனி மாவட்டம் முழுவதும் கிளைகளை மறு சீரமைப்பு செய்து புதிய நிர்வாகம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது, அதன் அடிப்படையிலும் கட்சியின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் நோக்கிலும் அனைத்து நிர்வாகிகளின்ஆலோசனையின் முடிவில் ஏக மனதாககம்பம் நகரத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன.,கம்பம் நகர நிர்வாகிகளாக கம்பம் நகர அவைத்தலைவர் (ம) மாவட்ட பேச்சாளராக:- S. பீர் சாயிபு கம்பம் நகர செயலாளர் : K.சபியுல்லா கம்பம் நகர பொருளாளராக:- S.சுல்தான் இப்ராஹிம் கம்பம்நகர துணைச்செயலாளர் : M.முகமது இதிரிஸ் A.பீர் ஒலி ஆகியோர்
மஜக கம்பம் நகர நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர், இறுதியாக மாணவர் இந்தியா மாநில ஊடக பிரிவு செயலாளர் அஷ்ரப் ஒலி நன்றி கூறி கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.இதில்மஜகமாவட்டதுணைச்செயலாளர்அம்ஜத்மீரான்,ஷாஜகான்,MJTS மாவட்ட செயலாளர் தாஹா, விவசாய அணி மாவட்ட செயலாளர் சாதிக், மாவட்ட நிர்வாகி பஞ்சர் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.