தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி…சிறப்பு செய்தி
தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி கீழ் இயங்குகின்ற திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி மற்றும் செங்குன்றம். சி.பா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடம் இணைந்து 10 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் மினி சப் ஜூனியர் சிலம்ப போட்டிநடத்தினர்கள் . இதில்நூற்றுக்கு மேற்பட்ட மாணவமாணவிகள் கலந்து கொண்டனர் செங்குன்றம் அருகே உள்ள வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி திடலில் போட்டி நடைபெற்றது. வடகரை ஊராட்சி மன்ற தலைவர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்.என். ஜானகிராமன் தலைமை தாங்கினார் ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடத்தின் தலைவர் .மூத்த ஆசான் ஆர். முருகக்கனி அனைவரையும் வரவேற்றார் தேசிய நிர்வாகிகள் எம்.ராஜா,எஸ் .துரை . என் .சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட நிர்வாகிகள்..எஸ். ராஜா .ஜே. ரஜினி , எம் .பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் மாணவ மாணவிகளின் சிலம்ப தனித்திறமை போட்டி நடத்தப்பட்டது.போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் பள்ளி உதவி தலைமை ஆசிரியர். பூவராகவன்.,செங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர். சுகுமாரி ஆகியோர் தொடங்கி வைத்து பாராட்டினர். பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். சி.பா ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடத்தின் தலைமை ஆசான் எஸ். ரிஸ்வான் பாஷா நன்றி கூறினார்.