தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில்நகர்மன்றகூட்டம்நடைபெற்றது
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மாதாந்திர சாதாரணக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் அய்யம்மாள் தலைமையில் நடைபெற்றன. இக்கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நகராட்சி எல்லைக்குட்பட்ட சிறு பாலங்கள் கட்டிடவும், பொது சுகாதாரம் நலன் கருதி குப்பைகளை நன்கு அப்புறபடுத்த பேட்டரி கார்களை பழுது நீக்கி செயல் படுத்தவும், சேதம் அடைந் த மழை நீர் வடிகால் சரி செய்யவும், அம்மா உணவகத்தினைமராமத்து பணிமேற்கொள்ளவும் தமிழக அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை ஒழித் திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட நோட்டீஸ், ஸ்டிக்கர் அடிக்கவும் என 6 தீர்மானங்கள் உட்பட 39 தீர்மானங்கள் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், ஆணையாளர் கணேஷ், பொறியாளர் ராஜவேல், நகரமைப்பு ஆய்வாளர் தங்கராஜ் சுகாதார ஆய்வாளர் சுந்தர்ராஜ் உட்பட அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..