காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்—முதல்வர்விஜய்…
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகிய துறைகளின் மூலம் குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரது நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் இல்லங்கள், பல்வேறு திட்டங்கள், சமூக சட்டங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.வெற்றித்தமிழகம்’தொலைநோக்கு அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதுறைசார்பாகசெயல்படுத்தக்கூடியதிட்டங்கள்,அதற்குத்தேவைப்படும்நிதிஒதுக்கீடுகள்குறித்தும்கலந்தாலோசிக்கப்பட்டது.மேலும், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) செயல்பாடுகள், தத்தெடுக்கும் மையங்கள், மகளிர், குழந்தைகள்,மூத்தகுடிமக்கள் ஆகியோருக்காக செயல்படுத்தப்படும் உதவி எண்கள், குழந்தைகளுக்கானகாலைமற்றும்மதியஉணவுத்திட்டம்,அங்கன்வாடிமையச்செயல்பாடுகள்குறித்துவிரிவாகஎடுத்துரைக்கப்பட்டது.துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை, தொடர்புடைய பயனாளர்களான குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்களிடம் தடையின்றி மற்றும் துரிதமாகக் கொண்டு சேர்க்கவேண்டும் எனவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகாதபடி
அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மேற்படி பழக்கத்திற்கு ஆளானகுழந்தைகளைமீட்டுஅவர்களுக்குஉரியமறுவாழ்வுஅளித்திடத்தேவையானநடவடிக்கைகளைமேற்கொள்ளவும்முதல்வர்அறிவுறுத்தினார்.மேலும், ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை’ 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்திட ஏதுவாக, தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி இத்திட்டத்தை முதற்கட்டமாக தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ.சித்திக், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளர் ம. பல்லவி பல்தேவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.