Others
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா திடீர் ஆய்வு…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சரகத்திற்கு உட்பட்ட செங்குன்றத்தில் செயல்பட்டு வரும் சைதாபேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா திடீர் ஆய்வு செய்தார்.சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் மருதம் செக்கு எண்ணெய் அரவை ஆலை மற்றும் சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றை பார்வையிட்டு விற்பனை அதிகரிக்க செய்வதற்கான ஆலோசனை வழங்கினார்.கூடுதல் பதிவாளர்டாக்டர். வீரப்பன், திருவள்ளூர் மண்டல இணை பதிவாளர். ஜெயஸ்ரீ, திருவள்ளூர் பொது விநியோக திட்ட துணை பதிவாளர். கோபால், சைதாபேட்டை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர். நீதி ராஜன் மேலாளர். தணிகாசலம் உடன் இருந்தனர்