fbpx
Others

3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடம்….

Witness in the Corridors Bureaucracy News: T.S Anbu IPS has been given full  additional charge as ADG, Crime Branch CID Tamil Nadu Policeதமிழகத்தில், தவெக தலைவரான விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு பிரிவு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். காவல் துறையை பொருத்தவரை முதல் கட்டமாக முக்கிய பிரிவான உளவுத் துறைக்கு ஐஜி-யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார்.மேலும், உயர் அதிகாரிகள் அடியோடு மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். அங்கு பணியிலிருந்த அபின் தினேஷ் மோடக்குக்கு சிபிசிஐடி பிரிவு கூடுதல் டிஜிபி பணி வழங்கப்பட்டது. அதோடு, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளுக்கும், அடுத்தடுத்து பணியிடம் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சென்னை முன்னாள் காவல் ஆணையர்லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக அருண் ஐபிஎஸ் நியமனம் அருண், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அன்பு ஆகியோர் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, உள்துறை செயலர் மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறி யிருப்பதாவது: தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக இருந்த மகேஷ்வர் தயாள் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி-கவும்,காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டிஜிபி அருண் ஊழல் தடுப்பு மற்றும்லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குநராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.அன்பு மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல்டிஜிபி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close