fbpx
GeneralRETamil Newsஇந்தியா

கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…! வானிலை மையம் அறிவிப்பு!

4 districts alerts as orange stage in Kerala

திருவனந்தபுரம்:

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் துவங்கி இருக்கிறது. அதன் காரணமாக, 102 சதவீதம் வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

 

இந்நிலையில், கேரளாவின் பல பகுதிகளில், தொடர்ந்து பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல ஓடியது. அடுத்து வரக்கூடிய நாட்களில் மழை மேலும் வலுக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணுார் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு, மிக கன மழைக்கான, ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்புடன் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Tags

Related Articles

Back to top button
Close
Close