fbpx
RETamil News

2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு , 3% ஊதிய உயர்வு!

2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு , 3% ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை செயலாளர் சொர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது;

அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற மறுநாள் ஊதிய உயர்வுக்கான நாளாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத உயர்வை வழங்கலாம் என்று 2014-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

2014 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது.

தற்போது இந்த சலுகை 2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சலுகையை மாநிலம் முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close