fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னையில் உச்சத்தில் கொரோனா…! முதலிடத்தை விடாத ராயபுரம்!

Chennai corporation corona cases

சென்னை:

சென்னையில் 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்க, ராயபுரம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 2,865 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி உள்ளது. ஒட்டு மொத்தமாக பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிப்பு அடைந்த 2865 பேரில் 1654 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இந் நிலையில் சென்னையில் மண்டலவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

அதன்படி, ஒட்டுமொத்தமாக 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை தந்துள்ளது. குறிப்பாக ராயபுரத்தில் அதிகபட்சமாக இதுவரை 6,837 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தபடியாக தண்டையார் பேட்டையில் 5531 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close