Others
விடுதலை சிறுத்தைகள் கட்சி-பழனி கோட்டாட்சியரிடம் புகார் மனு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பழனி கோட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.இதில் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் அடிவாரப் பகுதியில் கடை வைத்திருக்கும் ஏழை தலித் மக்களை கடை வைக்கக் கூடாது என மிரட்டுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடங்களில் வடமாநிலதவருக்கு கடை வைத்துக் கொள்ள அனுமதிப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.