fbpx
Others

மம்தாபானர்ஜி—100 நாள் வேலைத்திட்ட நிதி முடக்கம்..

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது சமூகபானர்ஜி வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்எனப்படும்100நாள்வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதில்சிறப்பாகசெயல்படுவதாக மேற்கு வங்காளம் பெயர் எடுத்துள்ளது. இருப்பினும், அந்த திட்டத்துக்காக மேற்கு வங்காளத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை பொறாமை மற்றும் பழிவாங்கும்அரசியலுக்காக மத்தியஅரசுநிறுத்திவைத்துள்ளது.2ஆண்டுகளுக்கு மேலாக ரூ.6 ஆயிரத்து 907 கோடி நிதியை முடக்கி வைத்துள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதியும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கு வங்காள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிதி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மக்கள் நீண்ட காலத்துக்கு இதை சகித்துக்கொள்ளமாட்டார்கள். மக்களின் உரிமைக்காக போராட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.டெல்லியுடன் நேருக்குநேர் மோத தயாராகி விட்டோம். இந்த போராட்டத்தை டெல்லிக்கு எடுத்துச் செல்வோம். பாதிக்கப்பட்ட மக்கள் எழுதிய கடிதங்களுடன் டெல்லிக்கு படையெடுத்து செல்வோம். மக்களின் குரல், டெல்லியில் உள்ள தலைவர்களின் காதுகளை எட்டுவதை உறுதி செய்வோம். மத்திய அரசுக்கு அடிபணியமாட்டோம்.மத்தியஅரசின்பழிவாங்கும்அரசியல்முடிவுக்குவரவேண்டும்மேற்குவங்காளத்துக்காகவும், அதன் மக்களுக்காகவும் உறுதியுடன் நிற்கிறோம். நீதி கிடைக்கும்வரை ஓய மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Related Articles

Back to top button
Close
Close