79வது சுதந்திர தினம்- செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார்.
இந்தியாமுழுவதும் இன்று ஆகஸ்ட் 15ம் தேதி 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார்.முப்படை ராணுவ வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி2014ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 12வது முறையாக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றியுள்ளார்.டெல்லி செங்கோட்டையை சுற்றி பட அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இன்று நம் சாதனைகளை கொண்டாடும் நாள், என் கண்களுக்கு முன்னாள் ஒரு மினியேச்சர் இந்தியாவை நான் பார்க்கிறேன், சிந்து நதி ஒப்பந்தத்தை ஏற்க முடியாது, இந்த சுதந்திர தினத்தில் நாட்டின் 140 கோடி மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.