ChennaiGeneralRETrending Nowதமிழ்நாடு
அப்பாவும் வரலை…பசங்களும் வரலை…!10ம் வகுப்பு தேர்வு வேண்டாம்னு கேஸ் போட நீங்க யாரு?
Chennai high court dismisses petition seeking ban for sslc exam
சென்னை:
10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள், பெற்றோர் தரப்பில் இருந்து யாரும் வழக்கு தொடரவில்லை.
இந் நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மனுவை வாபஸ் பெற மனுதாரர் அனுமதி கோரினார். அதன் பின்னர் அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.