பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்உடல் தகனம்…
குஜராத் காந்திநகரில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் காலையில் காலமானார். அவரவர் தாங்கள் திட்டமிட்டபடி தங்களது பணியை செய்யுங்கள் என்று பிரதமர் மோடியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தங்களது பணியை திட்டமிட்டபடி செய்வதே பிரதமரின் தாயாருக்கு செலுத்தும் மரியாதையாகும் என்று பிரதமர் குடும்பத்தினர் கூறியுள்ளனர். மறைந்த ஆன்மாவை மனதில் நிறுத்துவதே போதுமானது. கடினமான காலங்களில் அனைவரின் பிராத்தனைகள், இரங்கலுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் காந்தி நகரில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் வசித்து வந்தார். ஹீராபென் மோடி கடந்த ஜூன் மாதம் தன்னுடைய 100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவரை சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.100 வயதானாலும் ஹீராபென் மோடி தேர்தல்களில் தவறாமல் வாக்களித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.இதனிடையே ஹீராபென் மோடிக்கு கடந்த 28 ஆம் தேதி காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து மேத்தா மருத்துவமனைக்குப் பிரதமர் மோடி சென்று தாயாரைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அங்கிருந்த மருத்துவர்களிடம் தாயாரின் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தார்.பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 100. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயாரின் மறைவால் மனமுடைந்து போன பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.மோடியின் தாயார் ஹீராபென்னின் இறுதிச்சடங்கு குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி வீட்டில் வைக்கப்பட்டிருந்த தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் தனது தாயின் உடலை தனது தோளில் சுமந்து வந்ததைப்பார்த்து அவரது ஆதரவாளர்கள் கண்கலங்கினர்.பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு தகனம் செய்யும் இடத்துக்கு ஹீராபென்னின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது மோடியும் அந்த ஆம்புலன்ஸில் சென்றார். வழிநெடுக ஹீராபென்னின் உடலுக்கு மலர்த்தூவி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.