மாஸ்க் அணிந்தால் குறையும் கொரோனா…! ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி
Wearing mask may avoid corona says radhakrishan IAS
சென்னை:
சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக 5ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
தமிழகம் முழுவதிலும் தற்போதைய நிலவரப்படி 25,872 ஆக உள்ளது. இதில் தலைநகரான சென்னையில் மட்டும் 17,598 பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் சென்னை நிலவரம் குறித்து கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: சென்னையில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைகிறது.
மக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிந்து வந்ததால் பரவல் குறைந்துள்ளது. இந்தியாவில் இறப்பு சதவீதத்தை குறைக்க வேண்டும். மக்கள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மாஸ்க் அணிவதை தொடர்ந்தால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.