Others
தேனி – போடிநாயக்கனூர் – முதலமைச்சர் காணொளி காட்சி மூலம்திறந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, அரசு கண் மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறையின் சார்பில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மற்றும் குழந்தைகள் நோயாளிகள் நலப் பிரிவினை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து நலப்பிரிவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு க. வீ. முரளிதரன், இ. ஆ.பஅவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள், நகர மன்ற தலைவர் திருமதி ச. ராஜராஜேஸ்வரி அவர்கள், மருத்துவ நலப் பணி இணை இயக்குனர் மரு. நா. பரிமளா செல்வி அவர்கள், மருத்துவ அலுவலர் மரு. ரவீந்திரநாத் அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.