GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
24 மணி நேரத்தில் மின்னலாக பரவும் கொரோனா…! 13586 பேருக்கு பாதிப்பு!
In 24 hours india corona cases nearing 14000
டெல்லி:
24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் 13, 586 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
ஆனாலும் கொரோனா பாதிப்புகள் ஓயவில்லை. 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டிவிட்டது.
ஒரே நாளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,66,946லிருந்து 3,80,532 ஆக அதிகரித்துள்ளது. 12,573 பேர் பலியாகி உள்ளனர்.
அதிகளவாக மகாராஷ்டிராவில் 1,20,504 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5,751 பேர் பலியாகிவிட, 60,838 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் 25,601 பேரும், டெல்லியில் 49,979 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.