திருவள்ளூர்–அரசு சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி!
அரசு சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி!
திருவள்ளூரில் நடைபெற்றது!! தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் திருவள்ளூர் மாவட்ட அளவிலான கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
மாவட்ட கலை பண்பாட்டு துறை மண்டல துணை இயக்குனர்.மற்றும் மாவட்ட உறுப்பினர்- செயலர் ஹேமநாதன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி சந்திரசேகர் கடம்பத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கலை முதுமணி என்ற விருது 50 ஆண்டுகாலம் சிலம்பக் கலைக்காக அயராது பாடுபட்டு வரும் மூத்த ஆசான் சிலம்பச் செம்மல் ஆர். முருகக்கனி ஆசானுக்கு வழங்கப்பட்டது. மற்றும் புல்லாங்குழல். வாய்ப்பாட்டு. தெருக்கூத்து. பரதம். இப்படி பல்வேறு கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விருது பெற்றவர்களின் குடும்பத்தினர் மற்றும் கலை பண்பாட்டு துறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.