fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை…!

corona patient suicide in Chennai

சென்னை:

தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை தந்திருக்கிறது.

தமிழகத்தில் 17 ஆயிரத்து 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 342 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் அச்சத்தில் தற்கொலை செய்வது அதிகரித்து இருக்கிறது.

மாதவரம் அடுத்த மாத்தூர் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 25ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டார்.

வார்டில் கழிவறைக்கு சென்ற அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில், 57 வயது கொரோனா நோயாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை காரணமாக மருத்துவமனை நிர்வாகம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close