fbpx
Others

21 வயதில் ஐஏஎஸ் — இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணி….

ஊரே கொண்டாடிய வெற்றி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் சேர்ந்தவர் பிரதாப் இவரின் தந்தை முருகவண்ணன் விவசாயி. இவரின் தயார் முல்லைகொடி வீட்டை பார்த்து கொண்டிருந்தார். இவருக்கு தம்பியும் உள்ளார். திருவெல்வேலி, மதுரை மாவட்டங்களில் பள்ளி படிப்பை முடித்த இவர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் பொறியியலில் பட்டப்படிப்பை முடித்தார்.பள்ளியில் படிக்கும்போதே ஐஏஎஸ் ஆக வேண்டும் என கனவு கண்டார். பள்ளி பருவத்தில் மாணவர்களிடம் கேட்டால், பெரும்பாலனவர்களின் கனவு ஐஏஎஸ் ஆகதான் இருக்கும். ஆனால், கல்லூரி, வேலை என அப்படியே குழந்தைபருவ கனவாகவே போய்விடும். பிரதாபிற்கு அப்படி இல்லை. பள்ளி மாணவராக இருக்கும்போதே தீர்மானம் எடுத்தார். நான் ஐஏஎஸ் அதிகாரியே ஆவேன் என உறுதியாக நின்றார்.அந்த உறுதியுடன் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுத தயாராக தொடங்கிய அவர், பள்ளி படிப்பைபொறியியலை தேர்ந்தெடுத்தது ஏன்? முடித்தார்.உயர்கல்வியில்என்னபடிக்கலாம்எனயோசிக்கும்போது, அவர் தேர்வு செய்தது பொறியியல். இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறிய அவர், ”சிவில் சர்வீஸ் தேர்வை எழுத ஏதேனும் ஒரு டிகிரி போதும் என்று எனக்கு தெரியும். எனவே கல்லூரி படிப்பு பிளான் – பி ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு கெமிஸ்ரி ரொம்ப பிடிக்கும். அதனையே படிக்க விரும்பி கெமிக்கல் இன்ஜினியரிங் தேர்வு செய்தேன்” என கூறியுள்ளார். கல்லூரியில் கடினமாக உழைத்த அவர், 21 வயதில் தேர்வை எழுத தயரானார். இரவு பகலாக ஒரு நாளுக்கு 8 மணி நேரம் படித்தார். “சிவில் சர்வீஸ் தேர்விற்கு நிறைய புத்தகங்கள், நோட்ஸ் உள்ளது. அதிலிருந்து ஒவ்வொரு தலைப்புகளும் சரியானவற்றை தெரிவுப்படுத்தி படித்தேன்” என கூறியுள்ளார். 2016-ம் ஆண்டில் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வை எழுதினார். முதல்நிலை, முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றார்.நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும்போது, அவரின் வயது 21. நேர்முகத் தேர்வில் “21 வயதில் ஐஏஎஸ் எப்படி கொடுப்பது” என்பதே அவரின் முதல் கேள்வியாக இருந்தது. அப்போது, யுபிஎஸ்சி தேர்வை எழுத குறைந்தபட்ச வயது வரம்பு 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு நான் தகுதியானவரே என கூறியுள்ளார். மேலும், கெமிக்கல் பொறியியல் படித்து, ஏன் யுபிஎஸ்சி தேர்வு செய்தீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பது கெமிக்கல் பொறியியல் முதன்மை ஆகும். அந்த வகையில், மக்களுக்கான பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிப்பேன். மக்களுக்கு தேவையான மற்றும் ஊழலற்ற, நேர்மையான சூழலை உருவாக்குவேன் என பதிலளித்தார்.அப்படி, முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 21 இடமும், தமிழ்நாட்டில் முதல் இடமும் பெற்றார். லட்சக்கணக்கானவர் எழுதும் தேர்வில், 21வது இடம் பிடித்து சாதித்து காட்டினார் பிரதாப் ஐஏஎஸ். அவரின் இந்த வெற்றியை அவரின் ஊரே கொண்டாடியது. அவரின் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி என்று மட்டுமின்றி, முதல் அரசு அதிகாரியும் அவரே ஆவார். யுபிஎஸ்சி தேர்விற்கு தயராகும் இளைஞர்களுக்கு, தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் ஐஏஸ்பிரதாப் ஐஏஎஸ், கடைசி நேரத்தில் ஏற்கனவே படித்ததை மீண்டும் நன்கு படிக்க அறிவுறுத்தினார். கடைசி நாட்களில் மனதை அமைதியாக வைத்துகொள்ளுமாறு கூறுவார். அவரின் வெற்றிக்கு பெற்றோர்களும், நண்பர்களும் உதவியாக இருந்ததாக பேட்டியில் கூறியுள்ளார்.22 வயதில் இளம் ஐஏஎஸ் ஆக தேர்வான பிரதாப், பயிற்சிக்கு பின்னர் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். டெல்லியில் நகர்புற மேம்பாட்டு துறையில் உதவி செயலாளர், தர்மபுரி மாவட்டத்தில் துணை ஆட்சியர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியர், கோயம்புத்தூர் மாநகராட்சியில் கமிஷனர், தலைமை செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையில் துணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் திருவள்ளூர் மாவட்டத்தில்மாவட்டஆட்சியராகபணியாற்றிவருகிறார்.இவரின்பணியில்செயல்பாடுகள்   மூலம் மக்களின் ஆதரவையும், அன்பையும் பெற்றவர் பிரதாப் ஐஏஎஸ். பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா வழங்கியுள்ளார். ஒரே மாதத்தில் 1000 குளங்களை வெட்டி கின்னஸ் சாதனைப் படைத்தார். இதன் மூலம் முதலமைச்சர் விருதையும் பெற்றார். அரசு அதிகாரி கனவுடன் படித்துவரும் இளைஞர்களுக்கு பிரதாப் ஐஏஎஸ் உத்வேகமாக திகழ்கிறார்.

Related Articles

Back to top button
Close
Close