ஆர்.பி. உதயகுமார் – தவெகவால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை!
பசும்பொன்னில் 117 வது தேவர் ஜெயந்தி விழா
நாளை அக்டோபர் 30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டுமரியாதைசெலுத்தஉள்ளார்.இதனையடுத்து அதிமுக அம்மா பேரவை சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் “விஜய்யின் மாநாடு சிறந்த துவக்கமாக கிராண்ட் ஒப்பனாக அமைந்துள்ளது. இளைஞர் சமுதாயம் திமுகவை ஏற்றுக்கொள்ளவில்லைஎனவிஜய்யின்மாநாட்டுவாயிலாகபுரிந்துகொள்ளமுடிகிறது.விஜய் யின் மாநாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளனர். வாரிசு அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தவெக மாநாட்டில் எம்.ஜி.ஆரை சுட்டிக் காட்டி பேசியதை அதிமுக வரவேற்கிறது, திமுகவை தமிழ்நாட்டு மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு தவெக மாநாடு எடுத்துக்காட்டாக உள்ளது.சபரீசனை பார்க்காமல் தமிழகத்தில் யாரும் தொழில் தொடங்க முடியாத சூழல் உள்ளது. தவெகவால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை. ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும்.தவெக கொள்கைகள் வரவேற்கதக்கது. அதிமுகவின் 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அதிமுக மக்களின் நிரந்தர வாக்கு வங்கியை கொண்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டியதை தமிழ்நாட்டு மக்கள், இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இளைஞர் சமுதாயம் கொதித்து போயி விஜய் மாநாட்டுக்கு சென்றுள்ளனர்” இவ்வாறு கூறினார்.நேற்று விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் உரைக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மற்றும் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் தங்கள்து கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வரும் நிலையில், அதிமுகவை சேர்ந்த சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் தற்போது முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
