ஜூன்மாதம்முதல்டாஸ்மாக்கில் புதிய நடைமுறை…. அரசு அதிரடி உத்தரவு…?
தமிழகத்தில் 3600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் மாதம் 4ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களாக் சுற்றுசூழல்பாதிக்கப்படவதாக வரும் புகாரையடுத்து காலி பாட்டிலை திரும்ப கொடுப்பவர்களுக்கு 10 ரூபாய் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காலி பாட்டில்களை சேமித்து வைக்க இடம் இல்லாத காரணத்தால் டாஸ்மாக் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்துபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மதுபான பிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாகமதுவிலக்குமற்றும்ஆயத்தீர்வைத்துறைஅமைச்சர்க.விக்னேஷ்வெளியிட்டுள்ளஅறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே மாதம் 2022 ஆம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில்முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டுபடிப்படியாகத் தற்பொழுதுசென்னை,திருநெல்வேலி,விருதுநகர்நீங்கலாகதமிழ்நாட்டின்பிறஅனைத்துமாவட்டங்களிலும்செயல்படுத்தப்பட்டுவருகிறது.இத்திட்டத்தினைச்செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகப் பணியாளர்களிடமிருந்துப் புகார்கள் கடந்தகாலங்களில் வந்த வண்ணம் இருந்தன.
பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை வெளி முகமை வழியாகத் திரும்பப் பெற வேண்டும்என்றபிரதானகோரிக்கையைமுன்னிறுத்திஈரோடு,சேலம்,நாமக்கல்,திருப்பூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரிஆகியமாவட்டங்களைச்சார்ந்தபெரும்பாலானகடைகள்திறக்கப்படவில்லை. மேலாண் இயக்குநர், அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் நேரில் அழைத்துப் பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் இயன்றவரை சரி செய்யப்படும் என்ற வாக்குறுதியை அளித்தும் கடைகள் திறக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த அறிவுறுத்தலில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எவ்வளவு பொறுப்புள்ளதோ அதே அளவு பணியாளர்களுக்கும் பொறுப்பு உண்டு என்றும், இதனை செயல்படுத்த பணியாளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.இந்நிலையில் பணியாளர்களின் கோரிக்கைக்கு இணங்க வெளி முகமையின் வழியாக காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை உடனடியாக உருவாக்கி உயர் நீதிமன்றத்தில் உறுதிப் பத்திரம் (affidavit) அளித்து, வரும் ஜூன் மாத இறுதிக்குள் பணியாளர்களின் கோரிக்கையை முழுவதும் நிறைவேற்றும் வண்ணம், அவர்கள் பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை கையாளும் தற்போதைய நடைமுறையை முழுமையாக தவிர்க்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.எனவே, பணியாளர்கள் அனைவரும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து, பணியாளர் நலன் காக்க நிர்வாகம் முன்மொழியும் இத்திட்டத்தின் மீதுநம்பிக்கைகொண்டுஇன்றுவழக்கம்போலபணிக்குத்திரும்புமாறுகேட்டுக்கொள்ளப்படுவதாகஅந்தஅறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது…